மும்பை, மார்ச். 18- அண்மையில் துபாயிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிர்நீத்த 'சூப்பர் ஸ்டார்' ஶ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போவதாக பிரபல போலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா அறிவித்துள்ளார்.
அதேவளையில் ஶ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை ஓர் ஆவணப்படமாக எடுக்க அவருடைய கணவரும் போலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ஶ்ரீதேவியின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து போலிவுட் திரைப்படத்தைத் தயாரிக்க இயக்குனர் ஹன்சல் மேத்தா திட்டமிட்டிருக்கும் வேளையில் ஶ்ரீதேவி பாத்திரத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஶ்ரீதேவையை வைத்து நானொரு படமெடுக்க நினைத்திருந்தேன். ஆனால் இப்போது ஶ்ரீதேவி இல்லவே இல்லை என்றாகி விட்டது. எனவே, அவரது வாழ்க்கையைப் படமாக்கி அவருக்கு சமர்ப்பனம் செய்வேன் என்று ஹன்சல் மேத்தா சொன்னார்.
அந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஶ்ரீதேவியாக வித்யாபாலன் நடிப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று இப்போதே பலர் விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். ஶ்ரீதேவிக்கு இருப்பது போன்ற அழகான பெரிய கண்கள் வித்யாபாலனுக்கு இல்லை. ஶ்ரீதேவியை திரையுலக உச்சத்திற்குக் கொண்டு வந்த அந்த 'மயிலு' பாத்திரம் வித்யா பாலனுக்கு பொருந்தாது என்பதுதான் அவர்களின் குறைகூறலில் மிக முக்கியமான ஒன்றாகும்.
ஶ்ரீதேவியின் வாழ்க்கை திரைப்படம்: 'மயிலாக' மாறுகிறார் வித்யா பாலன்!
Typography
- Font Size
- Default
- Reading Mode